மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்- சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்- சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் பஞ்சாயத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிநேற்று முன்தினம்மதுரை பைபாஸ் சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அருகே காலை நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனைகள் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் காலை மூளை சாவு அடைந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் அறிவித்ததன் பேரில் அவரது உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்து சம்மதம் தெரிவித்தனர். மறைந்த நபரின் கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதேபோல் அவரது கண் கார்னியா எம்ஜிஎம் மருத்துவமனைக்கும் உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து மூளைச் சாவடைந்தவரின் உடலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நேரு, மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அருண் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு செ ன்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision