காதலனுடன் காணாமல் போன மாணவி - இருவரும் சடலமாக மீட்பு.

காதலனுடன் காணாமல் போன மாணவி - இருவரும் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருத்தகோடாங்கிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பொன்னுச்சாமி மகள் ஸ்ரீநிதி (15). அதே பகுதியில் கிழக்கு களத்தில் வசித்து வந்த கூலித் தொழிலாளி நைனான் (எ)அஜித் என்ற வாலிபரை மாணவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர், இளைஞரிடம் மாணவிக்கு வயது குறைவாக இருப்பதால் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது மாணவியை தற்போது உங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவி இரவு வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மாணவி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மாணவி, தனது காதலன் அஜித்துடன் விஷமருந்தி விட்டதாகவும், தற்போது பேச முடியாத நிலையில் மலை பகுதியில் இருப்பதாகவும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கிராமத்தின் அருகே உள்ள கருப்பூர் ரெட்டியபட்டி காப்பு காடு குமரிகுட்டு மலைப்பகுதியில் சென்ற உறவினர்களால், மாணவியும் அவரது காதலன் அஜித்தும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற புத்தாநத்தம் போலீஸார் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது மாணவி மற்றும் 19 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision