குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத ;தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசிப்பிடமின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,

இருங்களுர் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள Phase-II-இல் வீடுகள் வழங்கப்பட உள்ளதால் தகுதியான திருநங்கை பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

உரிய விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் பெற்று (06.05.2023) மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரின் தகுதிகள் :

1. பயனாளியின் பெயரில் வீடோ, நிலமோ இருக்க கூடாது

2. பயனாளியின் பெயரில் எவ்வித குற்றவியல் நடவடிக்கை இருக்க கூடாது.

3. குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.1,25,000/- செலுத்த வேண்டும் (இத்தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடனாக பெற ஏற்பாடு செய்து தரப்படும்)

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி. மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி. மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் : 0431 - 2413796 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn