70 %க்கு மேல் வாக்குப்பதிவு வந்தால் தான் ஒரு ஊரினுடைய எண்ணங்கள் வெளிப்படும் -அமமுக வேட்பாளர் செந்தில்குமார் பேட்டி

70 %க்கு மேல் வாக்குப்பதிவு வந்தால் தான் ஒரு ஊரினுடைய எண்ணங்கள் வெளிப்படும் -அமமுக வேட்பாளர் செந்தில்குமார் பேட்டி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சி கே.கே.நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வாக்குப்பதிவு மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது வெயிலுக்கு முன்பாக அனைவரும் வந்து வாக்களிப்பார்கள். அநேகர் குற்றச்சாட்டு மட்டுமே வைத்து வருகிறார்கள். குற்றச்சாட்டு செல்பவர்கள் வாக்குப்பதிவு செய்ய வருவதில்லை.

70%க்கு மேல் வாக்குப் பதிவு வந்தால் தான் ஒரு ஊரினுடைய எண்ணங்கள் வெளிப்படும், ஜனநாயக கடமை நாம் செய்தால் தான் கேட்பதற்கு உரிமை இருக்கும். கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் கண்டிப்பாக வாக்களியுங்கள் என  தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision