திருச்சி கொட்டப்பட்டு முகாமில் இருக்கும் பெண்மணியின் முதல் வாக்குப்பதிவு-ஆனந்த கண்ணீர்

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் இருக்கும் பெண்மணியின் முதல் வாக்குப்பதிவு-ஆனந்த கண்ணீர்

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு திருச்சி லோக்சபா தொகுதியில் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களில் முதல் முறையாக இவருக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நளினி கூறியதாவது... இலங்கைத் தமிழர்களுக்கான முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள். அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் தான் உள்ளனர்.

எங்களை இலங்கை தமிழர் என்று தெரிவிப்பதை விட இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்கிறோம். எங்களுக்கான பிறப்பு சான்றிதழில் இந்திய தமிழர் என்றும், இலங்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில், இந்தியர் என்பதற்காக எக்ஸ் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள். அதனால் அங்கு ஓட்டுரிமை இல்லாத நிலையில், இங்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் அந்த உரிமை இல்லாமல் முடங்கி கிடந்தோம். பொதுவாக முகாமில் உள்ள அனைவருமே இந்திய குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கிறோம். மத்திய அரசும் மாநில அரசும் எங்கள் எதிர்பார்ப்பை கவனத்தில் கொண்டு குடியுரிமை வழங்க வேண்டும். தற்போது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் முதல் முறையாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் எனக்கு ஓட்டுரிமை கிடைத்துள்ளது. இதை என்னைச் சார்ந்த மக்களுக்கான உரிமையாக கருதுகிறேன்.

எனது தாத்தா, பாட்டி இந்தியாவில் பிறந்தவர்கள். எனது அப்பா, அம்மா இந்தியா வம்சாவளியினர். நான் ராமநாதபுரத்தில் தான் பிறந்தேன். இதன் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு இந்திய பிரஜை என்பதற்கு ஆவணங்கள் வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்து போராடினார். இறுதியாக அவருக்கு இந்திய குடியுரிமைக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து தீர வேண்டும் என்ற எண்ணத்தில் நளினி போராடி தனது வாக்குரிமையை பெற்றார். திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அன்னை ஆசிரமம் எம் எம் நடுநிலைப்பள்ளியில் நளினி தனது வாழ்நாளில் முதல் வாக்குப்பதிவினை செலுத்தினார். என்னை போல் குடியுரிமைக்காகவும், வாக்குரிமைக்காகவும் ஏராளமானோர் முகாமில் உள்ளதாகவும், இந்தியா வம்சாவளியினர் குடியுரிமை வாக்குரிமை கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்த பொழுது, அகதிகள் முகாமில் உள்ளார். ஆனால் இந்திய பிரஜை இந்திய குடியுரிமை பெற்றவர். மற்றவர்கள் அகதிகள் என்பதால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இவர் குடியுரிமை பெற்றுள்ளதால் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளதால் இவர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision