கஞ்சா வியாபாரி சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

கஞ்சா வியாபாரி சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் புங்கனூரை அடுத்த மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (47). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்த பிரகாஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மலைப்பட்டியில் உள்ள 100 அடி அளம் உள்ள கல்குவாரியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது மிதந்த நிலையில் ஆண் சடலம் இருந்ததை கண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததையெடுத்து நிகழ்விடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டனர். உடல் உப்பி இறந்த நிலையில் இருந்தது காணாமல் போன பிரகாஷ் என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கல் குவாரியில் இறந்து கிடந்த பிரகாஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரகாஷ் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும், பிரபல ரவுடி மதனுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF