பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாத பூஜை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாத பூஜை

கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில்  உள் விளையாட்டு அரங்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாத பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் கோபிநாதன், அறங்காவலர் லட்சுமி பிரபா, இயக்குனர் வரதராசன், ஆலோசகர் மலர்விழி, பள்ளி முதல்வர் தயானந்தன், துணை முதல்வர் சுஜாதாமற்றும் ஆசிரியப் பெருமக்கள் முன்னிலையில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் தங்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.

பெற்றோர் அனைவரும் வரும் பொதுத் தேர்வில் தங்கள் குழந்தைகள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளையும், ஆசிகளையும் வழங்கினர். பள்ளி அறங்காவலர் லஷ்மி பிரபா மற்றும் இயக்குனர் வரதராசன் ஆகியோர் மாணவர்களுக்கான பொறுப்புகள் பற்றி பேசிய பின்னர் விழா இனிதே நிறைவு பெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision