காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் - பொறியாளர் சங்கத்தில் தீர்மானம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் - பொறியாளர் சங்கத்தில் தீர்மானம்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையின் பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கம் சார்பாக மாநில பொதுக்கூட்டம் திருச்சியில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சங்க திருச்சி கிளையில் தலைவர் ஐஸ்வர்யா மற்றும் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் வகித்தனர்.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழு கூட்டத்தில்.... நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித் துறையில் 503 பொறியாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஏழாவது ஊதிய குழு அமைத்து ஊதியம் வழங்க வேண்டும், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையில் உள்ள பொறியாளர், உதவி செயற்பொறியாளர், முதல் முதன்மை தலைமை பொறியாளர் வரை காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision