தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் படுகாயம்.

தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் படுகாயம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடி திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி கொண்டு பல்கர் லாரி மூலம் திருநெல்வேலிக்கு சிவன் (40) என்பவர் ஓட்டி சென்றார் .

அப்போது கல்லக்குடி அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே அதிகாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரி கட்டுப்பட்டு இழந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் கவிழ்ந்தது. சுமார் 200 மீட்டர் தூரம் வரை நகர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பல்கர் லாரியின் ஓட்டுனர் சிவன் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லக்குடி போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த பல்கர் லாரியை அப்புறபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

இந்த விபத்தினால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision