திருச்சி தனியார் பள்ளிக்கு நேரம் சொல்லி வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்

திருச்சி தனியார் பள்ளிக்கு நேரம் சொல்லி வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்

திருச்சி தேவதானம் அருகே உள்ள (சந்தானம் வித்யாலயா) தனியார் பள்ளி வளாகத்திற்குள் (ஜெயேந்திரர் மெட்ரிக் ஸ்கூல்) இயங்கி வருகிறது. அந்த ஜெயேந்திரர் பள்ளிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் கடந்த சனிக்கிழமை டைம் வைத்துள்ளோம் நாளை மாலை வெடிக்கும் என கடிதத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர். 

திருச்சி விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு முதல்வர் இரவு சென்னை புறப்பட இருக்கிறார். அதன் பிறகு வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சென்று சோதனை நடத்துவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகம் கடிதத்தை காவல்துறைக்கு தர மறுக்கிறது. முக்கியமாக அந்த பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பட்டறை, கூட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சியில் கடந்த வாரம் சர்வதேச விமான நிலையம் மற்றும் 8 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision