மாத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வீடு புகுந்து கத்தி அரிவாளால் தாக்கிய மர்ம நபர்கள்

மாத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வீடு புகுந்து கத்தி அரிவாளால் தாக்கிய மர்ம நபர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள கொள்ளுபட்டியை சேர்ந்தவர் காத்தான் (வயது 50). விவசாயி ஆன இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் வீடு கட்டி தனது மனைவி சித்ரா மற்றும் மகன் முத்துப்பாண்டி மகள் பாண்டிச்சேரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஒரு மணிக்கு முகமூடி அணிந்த 4 மர்மநபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்தனர். இதனை தொடர்ந்து சத்தம் கேட்கவே காத்தான் எழுந்து பார்த்தபோது, அங்கிருந்த மர்ம நபர்களை கண்டு கூச்சலிட்டார் . அதில் ஒருவன் கத்தியுடன் வந்து காத்தான் கழுத்தில் வைத்து கூச்சலிடக் கூடாது என மிரட்டியுள்ளான். மேலும் மற்றொருவர் காத்தானின் மகன் முத்துப்பாண்டி கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியுள்ளான்.

 தொடர்ந்து காத்தான் அவர்களிடம் மல்லுக்கட்டி கூச்சலிட்டார். இதையடுத்து காத்தானின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது முத்துப்பாண்டியன் மனைவி சித்ரா மகள் பாண்டீஸ்வரி ஆகியோரை ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அங்கிருந்து தப்பி ஓடினர்.காத்தான் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபர்களை விரட்டி பிடித்தனர். இதில் இருவரைப் பிடித்து மாத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய மற்ற இருவரை தேடி வருகின்றனர்.மர்மநபர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த காத்தானின் மனைவி சித்ரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது மகள் பாண்டீஸ்வரி கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திட்டமிட்டு கொள்ளையடிக்க மறுமணம் அவர்கள் உள்ளே நுழைந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நள்ளிரவில் வீடு புகுந்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்கள் தர் அடி கொடுத்துபோலிஸ்ஸில் ஒப்படைத்தனர்கைது செய்யப்பட்டவர் பாலகப்பிரமணியன்இந்து பாரதிபுதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்கைது செய்யப்பட்டவர் மீதுமாத்தூர் மண்டையூர் கீரனூர் உடையாளி பட்டி பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளன.