தனது முயற்சியால் தேசியசட்ட பல்கலைக்கழகத்தில் வெல்ல முடியும் என நிரூபித்த பழங்குடியின மாணவன்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 13 கிராமங்கள் உள்ளன. பச்சைமலையில் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம் மட்டுமே அதை சார்ந்து அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரதான தொழிலாக இருப்பது முந்திரி சாகுபடி மட்டுமே. அவ்வப்போது அப்பகுதி மக்கள் கூலி வேலைக்குச் சென்று தங்களது அன்றாட வாழ்வை கழித்து வருகிறார்கள்.
அவசர உதவிக்கு கூட அவர்கள் கரடு முரடான மலைப்பாதையை கடந்து 30 கிலோமீட்டர் வந்தாக வேண்டும். வாழ்க்கையில் நகரத்தின் வாசனையே அறியாத பழங்குடியின மக்களில் அரசின் உண்டு உறைவிட பள்ளியில் பயின்ற மாணவனின் முயற்சியால் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் வெல்ல முடியும் என நிரூபித்தது உள்ளார் பழங்குடியின மாணவன்.
பச்சமலை பகுதியில் தோனூர் கிராமத்தில் வசித்து வரும் செல்வகுமார் இவருக்கு பரத் ,சரத்,விஷ்வா என மூன்று மகன்கள் உள்ளனர் இவரது மனைவி கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாகவே இறந்துவிட்ட நிலையில் செல்வகுமார் தனது மூன்று மகன்களையும் தாய் இல்லாத குறை இல்லாமல் தங்களது மகன்களை வளர்த்து வந்தார். அவர்களது வீடு ஒருவர் நிமிர்ந்து கூட செல்ல முடியாத நிலையில் தான் அவரது வீடு உள்ளது. நான் என்னதான் கஷ்டப்பட்டாலும் தனது மகன்களை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமைக்கு நிறுத்த வேண்டும் என செல்வகுமார் ஆசைப்பட்டார் ,
இந்நிலையில் அவரது மூத்த மகன் பரத் என்பவர் பச்சை மலையில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிற்றுவிட்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய் பீம் திரைப்படம் பரத்தின் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. ஏன் இது போல் சட்டம் படித்து நமது மலைவாழ் மக்களுக்கு நன்மை செய்யக்கூடாது என அவரது மனதில் கேள்வி எழும்பியுள்ளது .
இது குறித்து தனது தலைமையாசிரியரிடம் பேசிய பரத்திற்க்கு அவரது தலமை ஆசிரியர் அறிவுரைப் படி தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் நடத்தப்படும் தேர்வு குறித்து தெரிவித்தார் .அதன்படி தனது தந்தையிடம் நானும் இது போல் சட்டம் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நிலையில் செல்வகுமாரும் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டு தனது தலைமை ஆசிரியர் உதவியோடு தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று தனது மகனுக்கு உதவி செய்தார்.
தேசிய பல்கலைக்கழக சட்டக்கல்லூரி நடத்தும் பொது தேர்வில் தேர்ச்சி தேர்வு எழுதி தேசிய சட்டக் கல்லூரி ஆனது இந்தியாவில், பெங்களூர், ஹைதராபாத் கல்கத்தா, ஜோக்பூர், ராய்ப்பூர், காந்திநகர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 24 இடங்களில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைந்துள்ளது இதில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் படிப்பதற்காக CLAT என்று சொல்லக்கூடிய பொது நுழைவுத் தேர்வு
நடத்தப்பட்டதில். இந்த நுழைவுத் தேர்வில் 28 பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் திருச்சி பச்சைமலை பள்ளியில் பயின்ற பரத் தேர்வு எழுதி வெற்றி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision