சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது - சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் ஆட்சியரிடம் கோரிக்கை!!

சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது - சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் ஆட்சியரிடம் கோரிக்கை!!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணியாக உள்ள சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்பதினை வலியுறுத்தியும்,

திருச்சி மாநகரின் முக்கிய பகுதியும் போக்குவரத்து நெரிசல் தொடரும் பகுதியும், பள்ளிகள், மருத்துவமனை நிறைந்த பகுதியுமான அண்ணாசிலை பகுதியில் அரசியல் கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து வரும் சூழ்நிலையில் மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெறும் சமயங்களில் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களால் காவேரி பாலம், சத்திரம் பேருந்து நிலையம் முதல் கலைஞர் அறிவாலயம் வரை வாகன ஓட்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர் என்றும்,

Advertisement

இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும், சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்தவும் வரும் காலங்களில் அண்ணாசிலை பகுதிகளில் போராட்டங்கள்,ஆர்பாட்டங்கள் நடத்த அனுமதி அளிக்ககூடாது எனவும் ஆட்சியரிடம் சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS