திருச்சியில் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கம் - பயணிகள் அவதி!!

திருச்சியில் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கம் - பயணிகள்  அவதி!!

Advertisement

திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Advertisement

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப கோரியும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் காலை முதலே அன்றாட பணிகளுக்கு செல்பவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், சுபமுகூர்த்த நாளான இன்று நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களும் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்துகள் இயக்காததால் கடும் அவதிக்குள்ளாகினர்.மேலும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு மட்டுமல்லாமல் சில தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வும் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

Advertisement

திருச்சியில் உள்ள 16 பணிமனைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல மாவட்டங்களுக்கு திருச்சியிலிருந்து செல்கின்றன. இதில் அரசு பேருந்துகள் 20% மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.