திருச்சி மாநகராட்சி 65 ஆவது வார்டு கிளையில் மூன்று முக்கிய கோரிக்கை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி 65 ஆவது வார்டு கிளையில் மூன்று முக்கிய கோரிக்கை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி 65 -வது வார்டில் உள்ள செம்பட்டு சுடுகாட்டை சீரமைக்க கோரியும், 65 வது வார்டு முழுவதும் போடப்பட்டுள்ள தரமற்ற சாலை போடப்பட்டதை கண்டித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொன்மலை

 பகுதி குழுவில் உள்ள 65 -வது வார்டு கிளையின் சார்பில் கிளைச் செயலாளர் ஜி.திராவிட தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் 6.06 2025 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு வயர்லெஸ் ரோட்டில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ம. செல்வராசு,சிபிஐ மாவட்ட

செயலாளர் எஸ். சிவா. பொன்மலை பகுதி குழு செயலாளர் P. ராஜா ,தோழர்கள். கே. பொன்னுதுரை, A. ஜான்பால், P. சந்தானம் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் . A. தர்மராஜ், மரிய பிரகாஷ், வழக்கறிஞர் இளைஞர் பெருமன்றம் எம். செல்வகுமார் மற்றும் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision