திருச்சி மாநகரில் ( 07.08.2022) இன்று 600 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாநகரில் ( 07.08.2022) இன்று 600 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழகம் எங்கும் இன்று (07.08.2022) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் 600 இடங்களில் இன்று (07.08.2022) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. 

மேலும் www.trichycorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுநாள்வரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினர்களையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO