திருச்சி மாநகர், மாவட்டத்தில் உதவி காவல் ஆணையர்கள், துணை சூப்பிரண்டுகள் மாற்றம்

திருச்சி மாநகர், மாவட்டத்தில் உதவி காவல் ஆணையர்கள், துணை சூப்பிரண்டுகள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் உதவி ஆணையர்கள், திருச்சி மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் ஒரே நாளில் 99 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழகம் முழுவதும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். திருச்சி திருச்சி மின்வாரிய ஊழல்கள் கண்காணிப்பு துணை சூப்பிரண்டு பாஸ்கர் திருச்சி கண்டோன்மெண்ட் உதவி கமிஷனராகவும், திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி அரியலூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடத்துக்கும், மதுரை தல்லாகுளம் உதவி கமிஷனர் சம்பத் திருச்சி பொன்மலைக்கும், பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்துக்கும் , கோவை மாநகர குற்றப்பிரிவு-2 உதவி கமிஷனர் சரவணன், திருச்சி மாநகர குற்றப்பதிவேடுகள் கூடத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது போல் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கும், திருவண்ணாமலை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துணைசூப்பிரண்டு பாலச்சந்தர் திருச்சி ஜீயபுரத்துக்கும், திருச்சி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை சூப்பிரண்டு சுப்பையா, திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision