திருச்சி அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம்

திருச்சி அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சமலையில் கோம்பை ஊராட்சிக்குள்பட்ட மணலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி மகன் கார்த்திக் (32). இவர் நேற்று முன்தினம் இரவு தன்னிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பச்சமலை அடிவாரம் பகுதியிலுள்ள பழமலையான் கோவில் அருகே வேட்டைக்கு சென்றார்.

அப்போது நாட்டுத் துப்பாக்கியில் அவர் வெடிமருந்து நிரப்பிய போது துப்பாக்கி எதிர்பாரதவகையில் வெடித்தது. இதில் அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனே சுய சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் வலி பொறுக்காமல் துடித்தார். உறவினர்கள் அவரை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மருத்துவமனை தகவலின் பேரில் துறையூர் போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision