குவாலிஸ் கார் ஏலம் அறிவிப்பு

குவாலிஸ் கார் ஏலம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பட்டு வளர்ச்சித்துறை, மண்டலத்துணை இயக்குநர் அலுவலத்தின் கீழ் இயங்கி வந்த கீழ்கண்ட அரசு வாகனத்தை (28.04.2023) வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க பொது ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாகன எண் : TN 30 G 345, வாகன வகை : குவாலிஸ் கார், வாகன மாதிரி 2003, இந்த வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் கீழ் குறிப்பிடப்பட்ட அலுவலகத்தில் பார்வையிடலாம் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகம், பட்டு வளர்ச்சித்துறை, எண்.06, வ.உ.சி சாலை, மத்திய பேருந்து நிலையம் பின்புறம், திருச்சியில் வருகின்ற (28.04.2023) வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் 10:55 மணிக்குள்

நுழைவு கட்டணம் ரூ.50/- மற்றும் முன்வைப்புத் தொகை ரூ.2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏலம் சரியாக 11:00 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஏலம் கேட்கப்பட்ட ஏலதாரர் ஏலத்தொகையில் 25 சதவீதம் மற்றும் அதற்கான GST - 18% தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். அதன் பின்னர், ஏலதாரருக்கு விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பட்டு வளர்ச்சித்துறை மண்டலத்துணை இயக்குநர் இல.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.