சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்.

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்.

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இனறு காலை தொடங்கியது.

காலை 09:30 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல், கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் கோயிலின் முன்புறத்தில் இருந்து பூ தட்டுகளை ஏந்தி மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டு முழங்க ஆதிமாரியம்மன் கோவிலை வலம் வந்து கோயிலுக்குள் வந்தனர்.

அதைத்தொடர்ந்து 10:00 மணிக்கு கோயில் குருக்கள் ஒவ்வொரு பூ தட்டுகளாக வாங்கி ஆதி மாரியம்மனுக்கு பூக்களை சாற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும், திரளான பக்தர்களும் பூக்களை தட்டுகளில் ஏந்தி கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.

நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision