ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்க முடியும் - திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி

ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்க முடியும் - திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி

திருச்சி அ.ம.மு.கவின் வடக்கு மாவட்ட
செயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த அ.ம.மு.க  பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் நதியினில் வெள்ளம் கரையினில் சிரிப்பு என்கிற பாடலில் ஓ.பி.எஸ் கூறிய இறைவன் யார்? அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை.

அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். ஒ.பி.எஸ் திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக் கொள்வோம் என்று முன்பு கூறினேன். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புது தேவையற்றது.

ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்க முடியும். ஆனால் அதை தற்போதுள்ள அரசிடம் எதிர்பார்க்க முடியாது. சசிகலா தொண்டர்களை சந்திப்பாரா என்கிற கேள்விக்கு அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டு கொள்ளுங்கள் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn