திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தற்போது 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் கர்ப்பிணிகள். இவர்கள் அனைவரும் பிற உடல் நல பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணிகள் 7 பேர் உட்பட 9 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn