திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கனரக சரக்கு வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மதுரை மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் வளநாடு கைகாட்டியில் இருந்து மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். 

திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

துறையூரிலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் முசிறி ரவுண்டானா, முசிறி பெரியார் பாலம், குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும். 

முசிறி மற்றும் சேலத்திலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் முசிறி பெரியார் பாலம், குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், குடமுருட்டிபாலம், வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும். 

சென்னை மார்க்கத்திலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் சிறுகனூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், வழியாக சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (NH-38) சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்து திருச்சி செல்ல வேண்டும்.

சிதம்பரம் அரியலூர் மார்க்கத்திலிருந்து (NH-81) வரும் கனரக சரக்கு வாகனங்கள் பெருவளநல்லூரிலிருந்து குமுளுர், தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் சென்று பெரம்பலூர் மார்க்கமாக சென்னை செல்ல வேண்டும்.