தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புயல் நிவாரண பொருட்கள்

தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புயல் நிவாரண பொருட்கள்

திமுக தலைவர் அனைத்து கழக நிர்வாகிகளும் நிவரணம் வழங்க அறிவுறித்தி இருந்தார். அதன்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் K.N.நேரு வழிகாட்டுதல்படி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிளிடம் ரூபாய் 1 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெறப்பட்டன.

அதனை இரண்டு வாகனங்களில் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் K.வைரமணி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிவாரண பொருட்களை நாளை மற்றும் நாளை மறுநாள் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண், துணை ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தசாமி கொடியாலம் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision