திருச்சியில் ஊரடங்கையை மீறியவர்களிடமிருந்து ரூபாய் 21 லட்சம் அபராதம்

திருச்சியில் ஊரடங்கையை மீறியவர்களிடமிருந்து ரூபாய் 21 லட்சம் அபராதம்

உலகலாவிய பெருந்தொற்றான கோவிட்-19 மற்றும் ஓமைக்ரானை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் பிறப்பிக்கப்பட்ட இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை, திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டத்தின் பேரில்,

திருச்சி மாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 சோதனை சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்புகளான மத்தியபேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், TVS டோல்கேட், மன்னார்புரம் சந்திப்பு ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலும் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது.

இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து. முகக்கவசம் அணிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றிதிரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. மேலும் மாநகரில் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகள் அருகில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், விதிகளை மீறும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 06.01.2022 தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து முககவசம் அணியாமல் வந்த 9734 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19,46,800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டும். சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின்போது கடைகளை திறந்து வைத்திருந்த நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.21 இலட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டது. மேற்கண்ட முழு ஊரடங்கின்போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவமனைகள், பால் விநியோகம், மற்றும் மருந்தகங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது.

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர வடக்கு மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் கோவிட் பெருந்தொற்று ஊரடங்கானது திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn