ஐஸ் வியாபாரி வெட்டி கொலை மகன் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி

ஐஸ் வியாபாரி வெட்டி கொலை  மகன் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கரும்புள்ளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (60) ஐஸ் வியாபாரி. இவர் தனது மகன் கோபி (எ) மாரிமுத்து, 3வது மனைவி ஸ்ரீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி இரு சக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார்.

மணப்பாறை அடுத்த குளித்தலை சாலையில் ஆண்டவர் கோவில் கலிங்கப்பட்டி பிரிவு  அருகே இருசக்கர வாகனத்தில் ஒரு கும்பல் இவர்களை சரமாரியாக வெட்டத் தொடங்கியது. இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரிமுத்து பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்துவிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் குப்புசாமி என்பவரின் உறவினர் பெண் ஒருவரின் காதல் பிரச்சினையால் வந்த முன் விரோதம் என்றும்,

அதில் இடை மறித்து தாக்கிய நபர்கள் கரும்புளிபட்டியைச் சேர்ந்த தினேஷ்,பாலாஜி,ஜீவா,மணி,சந்துரு,தேவா மற்றும் கரூர் மாவட்டம் தேவர்மலையைச் சேர்ந்த பிரவீன் என தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த குப்புசாமி உடன் பிரேத பரிசோதனைக்காக மணப்பறைய அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மனைவி கண்முன்னே கணவரும், மகனும் வெட்டப்பட்டது குறித்து வாய் பேச முடியாத ஸ்ரீரங்கம்மாள் செய்கையில் கூறியது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision