கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பு - தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பு - தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

திருச்சி மாநகர் கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பில் பல தலைமுறைகளாக வாழ்ந்த பயனாளிகள் அனைவருக்கும் வீடு வழங்கிட கேட்டும், கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. 

இப்போராட்டத்தையொட்டி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலை திருச்சி கிழக்கு தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, மலைக்கோட்டை பகுதி செயலாளர் பா.லெனின், கிளை செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் திரளான மக்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision