மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு - போலீசார் விசாரணை.

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு - போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர். இவரது மனைவி ராணி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் சௌந்தரின் மகள் லட்சுமி (16) குளித்துவிட்டு வீட்டின் அருகே உள்ள கம்பியில் துணிகளை காய வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததை அறியாத லட்சுமியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

அதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு லட்சுமியை மீட்டு சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் விசாரணை செய்து லட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision