திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி

சமூக ஆர்வலர் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஊடகவியலாளர் திருச்சி மாவட்டம் இணைந்து ராஜகோபுரம் முன்பாக கொரோன தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு பல்வேறு கட்ட விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தேசிய ஊடகவியலாளர் சங்கம், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ஸ், JKC அறக்கட்டளை தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Advertisement

பின்னர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் வழிமுறைகளை அச்சிடப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a