திருச்சியில் கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

திருச்சியில் கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வண்ணாங்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு பயங்கர விபத்து ஏற்பட்டது‌.

வண்ணாங்கோவில் பகுதியில் உள்ள தனியார் கூல்ட்ரிங்ஸ் கம்பெனிக்கு குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தனியார் கல்லூரி பகுதியில் நெடுஞ்சாலையை கடக்க சென்றது. அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது நேராக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மூன்று பேர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பகுதியில்  வாகனங்கள் கடக்கும்போது போதிய வெளிச்சம் இல்லை என்றும், தனியார் கம்பெனிக்கு செல்லும் கூல்ட்ரங்ஸ் ஏற்றி வரும் வாகனங்கள் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதாகவும், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சாலை பயனீட்டாளர்கள் அமைப்பினர் ஏற்கனவே கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu