திருச்சி மாநகரில் 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

திருச்சி மாநகரில் 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் அருகே காட்டுப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சொந்தமான பகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் திடீர் நகர் முட்புதரில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தவர்கள் யார்? அதனை வாங்கி வந்தவர்கள் யார்? என்பது குறித்து அரியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நாட்டு வெடிகுண்டு குறித்து அப்பகுதியை சேர்ந்த ரௌடி குட்ட பாலு என்பவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் பொன்மலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision