திருச்சியில் 100 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

திருச்சியில் 100 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

திருச்சி காந்திமார்கெட் தேவதானம் காவேரி ரோடு பகுதியில்  கோட்டை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அரசு தடை செய்யப்பட்ட, சட்டவிரோதமான முறையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ பொருட்கள் பதுக்கி வைத்திருந்த மேலசிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்த முருகன் (44), ஜாஃபர் ஷ தெருவைச் சேர்ந்த வச்சன ராம் @ வசந்த் (41) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision