தலை தீபாவளி கொண்டாடச் செல்லும், 99 காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது- எஸ்.பி. மூர்த்தி பேட்டி

தலை தீபாவளி கொண்டாடச் செல்லும், 99 காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது- எஸ்.பி. மூர்த்தி பேட்டி

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... திருச்சி மாவட்டத்தில் 40 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 52 ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.  

இந்த ஆண்டில் ஆயிரத்து 5 லட்சத்து 78 ஆயிரத்து 490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்றரை(ரூ 3.5) கோடி தண்டனைத் தொகை பெறப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் கொண்டாட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டு கடந்த 1 ஆம் தேதி முதல் 50 அலுவலர்கள் 250 காவலர்கள் மொத்தம் 300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்என தெரிவித்தார்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் துறையில் மிக சிறப்பாக செயல்பட்டு 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் 31.10.2021 வரை 2 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள திருட்டு வழக்கு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision