விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் தொடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS