விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா. மேலப்பச்சகுடி ஊரைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க பெண் நபர் சாலை விபத்து ஏற்பட்டு. இம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (11.03.2024) அன்று காலை 06:17 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு (12.03.2024) அன்று அதிகாலை 01:24 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் அவருடைய உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.

Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு (12.03.2024) அன்று இம்மருத்துவமனை முதல்வர் பேரா.மரு.D.நேரு., MD., DMRD., தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மரு.ஜெயபிரகாஷ் நாராயணன், MS., Mch., மற்றும் குழுவினர், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் மரு.நூர்முகமது, MD., DM., மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர் மரு.சந்திரன், MD, மற்றும் குழுவினர் மற்றும் செவியலியர் குழு, செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார்.

இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 24-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும். கல்லீரல் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இரண்டு கண் விழிகளும் இம்மருத்துவமனையில் உள்ள பயனாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் உராலிமலை கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அரசு சார்பில் இலுப்பூர் வருவாய் வட்டாட்சியர் தெய்வநாயகி, தாசில்தார் கருப்பையா ஆகியோர் பெண்ணின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision