மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படியும், தமிழக தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரைகளின்படியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பபட உள்ள வாக்குத்பதிவு இயந்திரங்களை (VVPATS) EMS-ல் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை இன்று (26.06.2023) திறக்கப்பட்டது.

இத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாதாந்திர தணிக்கை பணியும் மேற்கொள்ளப்பட்டது. அருகில் தனி வட்டாட்சியர் தேர்தல் முத்துசாமி  உடனிருந்தார்.