திருச்சியில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

திருச்சியில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அதனால், மத்திய பிஜேபி அரசின் மூத்த நிர்வாகிகள் போராட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது நேற்று. ஆனால், அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் தீர்வு காணப்படவில்லை. இதனால், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை பிஜேபி நிர்வாகிகளுக்கு தோல்வியில் முடிந்தது. இதனால், விவசாயிகள் அறிவித்தபடி தலைநகர் டெல்லியில் இன்று ரயில் மறியல் செய்வதை ஆதரித்தும், கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில்

விவசாயிகள் திருச்சி காவிரி ரயில் பாலத்தில் (15.02.2024) இன்று கோவனதுடன் போராட்டம் நடத்தினர். இதைப் பற்றி தகவல் அறிந்து வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision