ஆடி மாதம் முதல் வெள்ளி - இரவில் தங்கி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

ஆடி மாதம் முதல் வெள்ளி - இரவில் தங்கி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவார்கள். அதுவும் ஆடி வெள்ளி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது இந்த நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை முதலே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் மொட்டை அடித்தும், தீச்சட்டிந்தியும், அழகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் நேற்று இரவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமயபுரம் கோவிலுக்கு வருகை தந்து தற்போது கோவிலை சுற்றி தங்கினர். அதிகாலை ஆற்றில் குளித்துவிட்டு சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision