நீதி கேட்டு கல்லணையில் இருந்து விவசாயிகள் பேரணி

நீதி கேட்டு கல்லணையில் இருந்து விவசாயிகள் பேரணி

ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும், மேகத்தாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், ராசிமணல் அணை கட்டுமான பணியினை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற

மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் P. R. பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி (10.6.2024) பூம்புகாரில் துவங்கி, ஜூன் 12ல் மேட்டூர் அணையினை சென்றடைய உள்ளனர்.

அதற்காக (11.6.2024) செவ்வாய்க்கிழமை இன்று இரண்டாம் நாளாக கல்லணையில் துவங்கி, திருச்சி காவிரி பாலம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலையில் விவசாயிகள் அங்கிருந்து சிந்தாமணி அண்ணாசிலை, மெயின்காட்கேட்,

கரூர் பைபாஸ் சாலை வழியாக பேரணியாக சென்றனர். முன்னதாக கல்லணை ஆஞ்சநேயர் ஆராதனை மற்றும் கொள்ளிடத்தில் இறங்கி காவிரி நீர் ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision