விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் , லால்குடி வட்டாரம், புதூர் உத்தமனூரில் ரூபாய் 38 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (27.8.22)திறந்து வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தர பாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் தி. இரவிச்சந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் முருகேசன் , முக்கியப் பிரமுகர்க.வைரமணி மற்றும் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், மகிழம்பாடியில் கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூபாய் 30 இலட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தினை மக்களின் மருத்துவ சேவை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். இந்நிகழ்வில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் தி.இரவிச்சந்திரன், முக்கியப் பிரமுகர் க.வைரமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO