கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போக்கிரிகளின் மீது நடவடிக்கை எடுத்தும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின் பேரில், திருச்சி மாநகரம், காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட W.B ரோடு, மரக்கடை சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21-ந்தேதி ரிசாந்த் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் காவல்நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சூர்யா என்பவரை கைதுசெய்து
13.09.21ந்தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இவ்வழக்கின் குற்றவாளியான எதிரி சூர்யா வயது (21) என்பவர் மீது 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரி சூர்யா  என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்  கொடுத்த அறிக்கையிளை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரி சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணை 11.11.21ந்தேதி சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn