அரைநிர்வாணத்துடன் தோப்புக்கரணம் போட்ட விவசாயிகள்

அரைநிர்வாணத்துடன் தோப்புக்கரணம் போட்ட விவசாயிகள்

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக 29-ம் நாள் போராட்டமாக இன்று (25.08.2023), காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க கூடாது என்று அம்மாநில முதல்வரும், துணை முதல்வரும், அம்மாநில அனைத்து கட்சிகளும் கூறுவது நியாயமா..? நியாயமா..? அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு..

நல்ல புத்தியை கொடு உச்சி பிள்ளையார் தெய்வமே காப்பாத்து... விவசாயிகளை காப்பாத்து.. என்று கோஷ்ட்டவாறு அரைநிர்வாணத்துடன் தோப்புக்கரணம் போட்டு கோரிக்கை கோசம் முழங்க நூதன போராட்டம் நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision