திருச்சியில் அரசியல் பிரமுகர் மோட்டார் சைக்கிள் எரிப்பு

திருச்சியில் அரசியல் பிரமுகர்  மோட்டார் சைக்கிள் எரிப்பு

திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்த கதிர் ராஜா. இவர் திருச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராகவும், பா.ம.க மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மோட்டார் வாகனத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

அரசியல் போட்டியா? அல்லது முன் விரோதமா? என திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision