திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி வாலிபர் பலி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி வாலிபர் பலி

திருச்சி திருவானைக்காவல் பொன்னுரங்கபுரத்தில் வசித்து வந்த அனிஸ் (27) கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பொன்னுரங்கபுரம் பகுதியில் செங்கல் காலவாயில் வேலை பார்த்து வருகிறார். இன்று (24.10.2021) இரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரணியம்மன் கோயில் அருகே அணுகு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது.

நிலைதடுமாறி டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உள்ளார். அப்போது டேங்கர் லாரியின் சக்கரம் இவரின் மீது ஏறியதால் சம்பவ இடத்தில் பலியாகினார். இவ்விபத்து குறித்து ஸ்ரீரங்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn