ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு புதிய இணை ஆணையர் - இன்று பொறுப்பேற்பு!!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு புதிய இணை ஆணையர் - இன்று பொறுப்பேற்பு!!

Advertisement

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஜெயராமன் கடந்த மாதம் சென்னை அறநிலையத்துறைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

Advertisement

அதனைத்தொடர்ந்து சமயபுரம் இணை ஆணையராக இருந்த அசோக்குமார் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஆகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் வேலூரில் அறநிலையத் துறையில் மண்டல இணை ஆணையராக இருந்த மாரிமுத்து இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் இணை ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Advertisement