மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்!!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்!!

Advertisement

மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தனர்.இந்த பட்ஜெட் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும்,பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும்,தொழிலாளர்களுக்கு விரோதமான பல்வேறு அம்சங்கள் அதில் இருப்பதாக கூறி அந்த பட்ஜெடை கண்டித்தும்,மத்திய அரசு மின்சார திருத்த சட்டம் 2020 ஐ திரும்ப பெற வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச,ஐ.என்.டி.யூ.சி,சி.ஐ.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தலைமை தபால் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர்.அதை காவல் துறையினர் தடுக்க முற்பட்ட போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.