கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்!!

Advertisement

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கோவிட் தடுப்பூசியை திருச்சி அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். அவருடன் வருவாய் துறையை சேர்ந்த 7 அரசு ஊழியர்கள் கோவிட் தடுப்பூசியை தற்பொழுது போட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு... "என்னுடன் சேர்த்து வருவாய்த்துறையினர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர். இதுவரை 4342 பேருக்கு திருச்சி மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முன்கள களப்பணியாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. ஒரு வார காலத்தில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விடுவோம்" என தெரிவித்தார்.

Advertisement