திருச்சி அருகே கோர விபத்து ஐந்து பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்

திருச்சி அருகே கோர விபத்து ஐந்து பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேபோல் திண்டுக்கலிருந்து திருச்சி நோக்கி ஒரு கார் வந்தது. அப்போது வையம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் தாண்டி எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது.

இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 5 பேரும் ஆண்கள் நாகரத்தினம் (23),ஜயப்பன்,முத்துச்செல்வம்,மற்ற இருவரின்  பெயர் தெரியவில்லை.

 அரசு பேருந்து ஓட்டுனர் கார் மோதிய பொழுது இடது புறமாக பேருந்தை ஓட்டிய பொழுது அருகில் இருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.