பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட தாய் மகன் உட்பட நான்கு பேர் கைது.

பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட தாய் மகன் உட்பட நான்கு பேர் கைது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கல்லுப்பட்டியில் வசித்து வருபவர் தியாகராஜன் (60). இவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர்.  கடந்த மார்ச் 31ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த சுமார் 35 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக  துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் சண்முகம் சுந்தரம் தலைமையிலான காவலர்கள் தீவிரமாக  தேடி வந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் தாய் மகன் உட்பட நான்கு பேர் துவரங்குறிச்சி காவல்துறையினர் கைது செய்தனர்.

மணப்பாறை தாலுகா இ.கோவில்பட்டியை சேர்ந்த ஜெயராமன் மகன் சூரிய பிரகாஷ் (29), இவனது தாய் கஸ்தூரி (42), திருவண்ணாமலை மாவட்டம் செக்கு மேட்டு தெருவை சேர்ந்த குமார் மகன் சத்யராஜ் (23) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்த பண்டார என்பவர் மகன் ராமச்சந்திரன் (59) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

 இதில் கொள்ளை அடிக்க மூளையாக செயல்பட்டவன் சூரிய பிரகாஷ். கொள்ளையடித்த நகைகளை வாங்கிய திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர்கள் நால்வரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision