ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி திட்டம்!

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி திட்டம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யவும் சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சி திட்ட விவரம் : ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு ஆகியவை பயிற்றுவிக்கப்படும்பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் படிப்பு (Craftsmanship Course in Food Production & Patisserie),

உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு, (Craftsmanship Course in Food & Beverage Service), பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, (Diploma in Bakery & Confectionary), முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, (Diploma in Front Operation), ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு (Diploma in Housekeeping Operation), உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Dietetics & Hospital Food Service Post Graduate), விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Accommodation Operation & Management) ஆகியவை பயிற்றுவிக்கப்படும்.

இப்படிப்புகளுக்கான கட்டணம் அனைத்தும் தாட்கோவால் ஏற்கப்படும். மேலும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி திட்டத்தில் சேர தேவையான தகுதிகள் இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தாவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகணியில் பதிவு செய்யவும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ. ராஜாகாலளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி - 620001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn